Friday, 23 September 2016
Thursday, 22 September 2016
Tuesday, 20 September 2016
Sunday, 18 September 2016
பாடப்புத்தகங்களை நகல் எடுப்பது தவறல்ல: உயர்நீதிமன்றம்
பாடப்புத்தகங்களை நகல் எடுப்பது தவறல்ல: உயர்நீதிமன்றம்!
டெல்லி உயர்நீதிமன்றம், சர்வதேச புத்தகப் பதிப்பாளர்கள் தொடுத்த வழக்கினை தள்ளுபடி செய்திருக்கிறது. நகல் எடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்வதற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, இந்திய காப்புரிமை சட்டத்தின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
போட்டோகாப்பியர் கியோஸ்க், சர்வதேச பதிப்பாளர்கள் வெளியிட்ட பாடப்புத்தகத்தினை நகலெடுத்து மாணவர்களுக்கு விற்பனை செய்ததற்காக விதிக்கப்பட்ட தடையினை, நீதிபதி ராஜீவ் சஹாய் நீக்க உத்தரவிட்டார். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அருகே உள்ள ராமேஸ்வரி போட்டோகாப்பி சர்வீஸஸுக்கு, இதே போன்ற காரணத்துக்காக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாடப்புத்தகங்களை நகல் எடுத்துக் கொடுப்பது தங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாக யுனிவர்சிட்டி பிரஸ், கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் மற்றும் டெய்லர் அண்ட் பிரான்சிஸ் சர்வதேச புத்தகப் பதிப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், டெல்லி பல்கலைக்கழகம், மாணவர்கள் பாடப்புத்தகங்களை நகல் எடுப்பது கல்வித்தேவைக்காக தான், இதனை அத்துமீறலான விஷயமாக கருதக்கூடாது என்று தெரிவித்திருக்கின்றனர். புத்தகங்களின் விலை அதிகமாக இருப்பதால் மாணவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். காப்புரிமைச் சட்டம் 1957-ஐ முன்வைத்து, பல்கலைக்கழகத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மாணவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு நகல்களை பயன்படுத்துகிறார்கள், விற்பனை நோக்கத்திற்காக யாரும் நகல் எடுப்பதில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் போட்டோகாப்பியர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அறிவுசார் சொத்து நிபுணர்கள் இந்தத் தீர்ப்பினை பாராட்டியிருக்கிறார்கள். நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில், “நகல் எடுப்பது தெய்வீகமான விஷயமல்ல. ஆனால், கற்றல் என்பது முக்கியமான சமூக தேவையாகும். இது முக்கியமான தருணம் என்பதை மனதில் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
*யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அழைப்பு
🚺✳🚺✳🚺✳
*யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அழைப்பு*.🌹
யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவித் தொகையுடன் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
2016ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், முதன்மைத் தேர்வுக்காக மாணவர் / மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் எண். 163/1, பி.எஸ். குமாராசாமி ராஜா சாலை, சென்னை – 28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மூன்று அலுவலக வேலை நாட்களில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சேர்க்கை நடைபெறும். முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு *தமிழ்நாட்டைச் சார்ந்த மொத்தம் 225 (SC-92, SC(A)-18, ST-03, MBC-40, BC-54, BC(M)-07, DA-07 மற்றும் OC-04)மாணக்கர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.* இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ / மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பயிற்சி வகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பித்து முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை நடைபெறும். *பயிற்சிக் காலத்தில் கட்டணமில்லா விடுதி வசதி உண்டு, இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000/- உதவித் தொகை தமிழக அரசால் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும்.*
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய *முகவரி :*
*முதல்வர் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், சென்னை – 28. தொலைபேசி எண் : 044 / 24261475
Monday, 5 September 2016
✳🚺✳🚺✳🚺 *இன்றைய கல்விச்செய்திகள் 6.9.16* 🌺♻🌺♻🌺♻
✳🚺✳🚺✳🚺
*இன்றைய கல்விச்செய்திகள் 6.9.16*
🌺♻🌺♻🌺♻
🎀
*அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.*
🎀
*பஞ்சாப் நேஷனல் வங்கியில்191மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!*
🎀
*ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை*
🎀
*வருகின்ற 13.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.*
🎀
*டிப்ளமோ நர்சிங் என்ற இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், இன்று துவங்குகிறது.*
🎀
*EMIS- ஒன்றிய அளவில் தனி அலுவலர் நியமனம் இல்லை-EMIS- குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட தகவல்*
🎀
*பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது. தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன*
🎀
*ஒருங்கிணைந்த தேசிய நுழைவு தேர்வான, ஜே.இ.இ., மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது*
🎀
*கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான சவால்களை ஆசிரியர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் 14 கட்டளைகளை பிறப்பித்தார். ஆசிரியர் தின விழாவில் அவரது பேச்சு, அதிகாரிகளை அசர வைத்தது.*
இந்த நாள் இனிய நாளாக அமைய
வாழ்த்துகள்
*ஜெயராஜ் தூத்துக்குடி*
🙏🙏🙏🙏🙏🙏🙏
Thursday, 1 September 2016
*CPS MISSING CREDITS*
🎀🎀🎀
*CPS MISSING CREDITS*
*நண்பர்களே Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form-ல்*
*விடுபட்டமாதங்களின் தொகையை பதிவு செய்து தங்களது DDO/AEEO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அவர்கள் பதிவு செய்து FORWARD செய்வதன் மூலமாக MISSING CREDIT சரிசெய்யப்படும்*
👇👇👇
*2015-16 வருடத்திற்க்கான கனக்கீட்டுத்தாள்
🎀🎀🎀
*CPS ACCOUNT SLIP*
*2015-16 வருடத்திற்க்கான
கனக்கீட்டுத்தாள்
CPS ACCOUNT SLIP
can be download through the following website
http://cps.tn.gov.in/public/
Subscribe to:
Posts (Atom)